உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மதுபாட்டில் வைத்திருந்தவர் கைது

மதுபாட்டில் வைத்திருந்தவர் கைது

கள்ளக்குறிச்சி; வரஞ்சரம் அருகே விற்பனைக்காக மதுபாட்டில் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர். வரஞ்சரம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கொங்கராயபாளையம் சுடுகாடு பகுதியில், அதே கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மகன் விஜயகுமார்,19; என்பவர் விற்பனைக்காக மதுபாட்டில்கள் வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து, விஜயகுமாரை கைது செய்து, அவரிடமிருந்த 13 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை