உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஜோசியரை தாக்கியவர் கைது

ஜோசியரை தாக்கியவர் கைது

சின்னசேலம்; சின்னசேலம் அருகே ஜோசியரை தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.சின்னசேலம், போயர் தெருவைச் சேர்ந்தவர் முத்தையன், 42; ஜோசியர். வாசுதேவனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த், 37; இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் இடம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.கடந்த 17ம் தேதி மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.ஆத்திரமடைந்த ஆனந்த் தனது மனைவி மற்றும் உறவினருடன் சேர்ந்து முத்தையனை தாக்கினார்.புகாரின் பேரில், ஆனந்த், கங்கேஸ்வரி, ஆறுமுகம் ஆகிய 3 பேர் மீது வழக்குப் பதிந்து ஆனந்தை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை