உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / காணாமல் போன மூதாட்டி: ஏரியில் சடலமாக மீட்பு

காணாமல் போன மூதாட்டி: ஏரியில் சடலமாக மீட்பு

திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் அடுத்த தகடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமாயி,55; மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த 31ம் தேதி காலை 8:30 மணிக்கு வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.இது குறித்து அவரது மகன் ஏழுமலை, 35; திருப்பாலபந்தல் போலீசில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் நேற்று திருப்பாலபந்தல் ஏரியில் ராமாயி சடலமாக மிதப்பதை அப்பகுதி மக்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ