மேலும் செய்திகள்
இளம்பெண்கள் 2 பேர் மாயம்
08-May-2025
கள்ளக்குறிச்சி : தண்டலை கிராமத்தில் மாயமான கூலித் தொழிலாளி உடல் மீட்கப்பட்டது.கள்ளக்குறிச்சி அடுத்த தண்டலை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன், 46; விவசாய கூலித்தொழிலாளி. இவர், கடந்த 17ம் தேதி மயானத்தில் குழிவெட்டும் பணியில் ஈடுபட்டார். அதன் பிறகு அவரை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 5:00 மணியளவில் மயானத்திற்கு அருகே உள்ள விளைநில கிணற்றில் அவரது உடல் மிதந்தது. கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, ஆனந்தன் உடலை மீட்டு, அவரது இறப்புக்கான காரணம் குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
08-May-2025