உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தேசிய நெடுஞ்சாலை திட்ட நிலை லோக்சபாவில் எம்.பி., கேள்வி

தேசிய நெடுஞ்சாலை திட்ட நிலை லோக்சபாவில் எம்.பி., கேள்வி

கள்ளக்குறிச்சி: தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களின் நிலை குறித்து கள்ளக்குறிச்சி எம்.பி., கேள்வி எழுப்பினார்.கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி எம்.பி., மலையரசன் லோக்பசாவில் கேள்வி எழுப்பி பேசியதாவது:தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட தேசிய நெடுஞ்சாலை திட்ட பணிகள், நிலுவையில் உள்ள திட்ட பணிகள், ஒவ்வொரு திட்டத்திற்கான மொத்த நீளம், செலவுகள் உள்ளிட்ட விபரங்களை வெளியிட வேண்டும். மேலும், அடுத்து வரும் 5 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட இருக்கும் தேசிய நெடுஞ்சாலைகளின் விபரங்கள் மற்றும் அதற்கு ஒதுக்கப்பட்ட நிதியின் விபரங்களையும் தெரிவிக்க வேண்டும் என பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை