மதுரை வீரன் கோவிலில் முப்பூசை திருவிழா
ரிஷிவந்தியம் : வாணாபுரம் அடுத்த ஏந்தல் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த மதுரை வீரன் கோவிலில் 2 வருடங்களுக்கு ஒருமுறை முப்பூசை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் முப்பூசை தி ருவிழா நடந்தது. இதையொட்டி ஊர் பொதுமக்கள் கோவிலுக்கு சென்று ஊரணி பொங்கலிட்டு வழிபட்டனர். தொடர்ந்து, சுவாமிக்கு பூஜை செய்து ஆடு, கோழி பலி கொடுத்து படையலிட்டனர். ஏந்தல் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.