மேலும் செய்திகள்
விபத்தில் சிறுவன் பலி தந்தை, மகன் மீது வழக்கு
22-Apr-2025
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த, சிறுவன் மீது 'போக்சோ' வழக்கு பதிவு செய்யப்பட்டது.கள்ளக்குறிச்சியை சேர்ந்த, 13 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கிறார். கடந்த, 16ம் தேதி வீட்டிற்கு அருகே இருந்த சிறுமிக்கு, அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் பாலியல் தொந்தரவு செய்தார். சிறுமியின் தாய் கேட்டதற்கு, சிறுவன் தரப்பினர் அவரை திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர்.இது குறித்து சிறுமியின் தாய், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார், 17 வயது சிறுவன் மீது 'போக்சோ'வில் வழக்கு பதிந்தனர். மேலும், அவரது தரப்பை சேர்ந்த கொலை மிரட்டல் விடுத்த 15 வயது சிறுவன் மற்றும் சன்னியாசி,30; ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.
22-Apr-2025