சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ
கள்ளக்குறிச்சி:சின்னசேலம் அருகே சிறுமியை காதலித்து திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப் பதிந்தனர். சின்னசேலம் அடுத்த மாதவச்சேரி மணி மகன் வினோத்குமார், 27; இவர், சங்கராபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து கடந்தாண்டு திருமணம் செய்துள்ளார். தற்போது சிறுமி 4 மாதம் கர்பமாக உள்ள நிலையில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றுள்ளார். சிறுமி திருமணம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில், சின்னசேலம் வட்டார வளர்ச்சி அலுவலக மகளிர் நல ஊர் நல அலுவலர் பஞ்சவர்ணம் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், வினோத்குமார் மீது போலீசார் 'போக்சோ' சட்டத்தில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.