உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளக்குறிச்சியில் வரும் 29ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

கள்ளக்குறிச்சியில் வரும் 29ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

கள்ளக்குறிச்சி, ; கள்ளக்குறிச்சியில் வரும் 29ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. இது குறித்து கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு; கள்ளக்குறிச்சியில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 29ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடைபெறும் முகாமில் வங்கி, நிதி, வாகன உற்பத்தி, காப்பீடு, சில்லரை விற்பனை சார்ந்த முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. நிறுவனத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கேற்ப பணியாட்களை தேர்வு செய்கின்றனர். மாவட்டத்தில் 10ம் வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பி.இ., பி.டெக்., படிப்பு முடித்த ஆண்கள், பெண்கள் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம். விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.inஎன்ற இணையதளம் வழியாக பதிவு செய்து கலந்து கொள்ளலாம். தனியார் துறையில் வேலை பெறுபவர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ