மேலும் செய்திகள்
பெருமாள் கோவிலில் புரட்டாசி உற்சவம்
28-Sep-2025
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி பெருமாள் கோவில்களில் புரட் டாசி நான்காவது சனிக் கிழமை வழிபாடு நடந்தது. கள்ளக்குறிச்சி புண்டரீக வல்லி தாயார் சமேத தி ல்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி நான்காவது சனிக்கிழமை உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது. அதிகாலை சுப்ரபாத சேவை, விஸ்வரூப தரிசனம் நடந்தது. உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். விஷ்ணு சகஸ்ரநாம மந்திரங்களை வாசித்து பூஜைகள் செய்யப்பட்டது. தேசிக பட்டர் பூஜைகளை செய்து வைத்தார். அதேபோல் கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் கோதண்டராமர் கோவிலிலும், அம்மன் நகர் ஆரா ஆனந்த சீனிவாச பெருமாள் கோவிலிலும் புரட்டாசி 4வது சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடந்தன.
28-Sep-2025