உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ரேஷன்கடை விற்பனையாளர் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு

ரேஷன்கடை விற்பனையாளர் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 'சேல்ஸ்மேன்' பணிக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.கள்ளக்குறிச்சி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் செய்திக்குறிப்பு:மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 'சேல்ஸ்மேன்' பணிக்கு நாளை 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் https://www.drbkak.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பித்து வருகின்றனர்.விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்பதால், இணைய வழி இடர்பாடுகளை தவிர்க்கும் பொருட்டு தகுதி வாய்ந்த நபர்கள் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ