உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சாய்பாபா கோவில் ஆண்டு விழா

சாய்பாபா கோவில் ஆண்டு விழா

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார், தியாகி வடிவேல் நகர் சீரடி குபேர சாய்பாபா கோவிலில் 4ம் ஆண்டு துவக்க விழா நடந்தது. விழா காலை 8:00 மணிக்கு கோமாதா பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து கலச ஸ்தாபனம், யாகசாலை பூஜை, மூலவருக்கு பக்தர்களால் அபிஷேகமும், தொடர்ந்து, தங்கக்கவச அலங்காரமும், ஆரத்தியும் பூஜையும் நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனையும், மதியம் 1:30 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இரவு 8:00 மணிக்கு ஆரத்தி, 9:00 மணிக்கு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.விழாவிற்கான ஏற்பாடுகள் கோவில் நிர்வாகி சுப்பு மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை