உள்ளூர் செய்திகள்

மணல்  கடத்தியவர் கைது

சங்கராபுரம்,: சங்கராபுரம் அருகே ஆற்று மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். சங்கராபுரம் அடுத்த புதுப்பாலப்பட்டு மணி நதியில் மணல் கடத்தல் நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் பிரதாப்குமார் மற்றும் போலீசார் நேற்று காலை அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, ஆற்றில் டிராக்டர் டிப்பரில் அனுமதியின்றி மணல் கடத்திய புதுப்பாலப்பட்டு மாணிக்கம் மகன் காரல்மார்க்ஸ், 29; என்பவரை கைது செய்து, டிராக்டர் டிப்பரை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி