மேலும் செய்திகள்
நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
07-Sep-2025
அய்யனார் திருக்கோயிலில் அபிஷேக ஆராதனை!
17-Sep-2025
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் நடராஜருக்கு புரட்டாசி சதுர்தசி சிறப்பு அபிஷேகம் நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த சாமியார் மடம் செம்பொற்சோதிநாதர் கோவிலில் சிவகாமி அம்மை உடனுறை நடராஜருக்கு வளர்பிறை புரட்டாசி சதுர்த்தசி சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனையொட்டி, நேற்று அதிகாலை 5:00 மணி முதல் திருவாசகம் முற்றோதல் துவங்கி, சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பன்னிரு திருமுறை விண்ணப்பித்து, மலர்களால் அலங்கரித்த நடராஜர், சிவகாமி அம்மை, திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர், மீனாட்சி சொக்கநாதர் சுவாமிகளுக்கு பேரொளி வழிபாடு நடந்தது. சங்கு, கயிலை வாத்தியம், முழவு, கஞ்சிரா, பிரம்மதாளம் வாசித்து பூஜைகள் நடந்தன. திருநாவுக்கரசு திருமட சிவனடியார்கள் வழிபாடு நடத்தினர். இதேபோல் கள்ளக்குறிச்சி சிவகாமி அம்மன் உடனுறை சிதம்பரேஸ்வரர் கோவிலிலும் நடராஜருக்கு புரட்டாசி சதுர்த்தசி சிறப்பு வழிபாடு நடந்தது.
07-Sep-2025
17-Sep-2025