உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சங்கராபுரத்தில் கூடுதலாக போக்குவரத்து போலீசார் நியமிக்க நடவடிக்கை தேவை

சங்கராபுரத்தில் கூடுதலாக போக்குவரத்து போலீசார் நியமிக்க நடவடிக்கை தேவை

சங்ககராபுரம் : சங்கராபுரத்தில் போக்குவரத்து போலீசாரை கூடுதலாக நியமிக்க எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.சங்கராபுரம் நகரம் வேகமாக வளர்ந்து வரும் நகரமாக மாறி வருகிறது. சங்கராபுரம் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அத்தியாவசிய தேவைக்கு சங்கராபுரம் வந்து செல்கின்றனர்.இரு சக்கர வாகனத்தில் வரும் வெளியூர் மக்கள் தங்கள் வாகனத்தை கடையின் முன்பு தாறுமாறாக நிறுத்திச் செல்கின்றனர். மேலும் பல கிராமங்களில் இருந்து சங்கராபுரம் மற்றும் கள்ளக்குறிச்சிக்கு அதிக அளவில் பள்ளி மற்றும் கல்லுாரி வாகனங்கள் காலை, மாலை வேளைகளில் இயக்கப்படுகின்றன.இதனால், சங்கராபுரம் நகர கடைவீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்தை சரி செய்ய போதுமான போக்குவரத்து போலீசார் இல்லாததால் அடிக்கடி டிராபிக் ஜாம் ஆகிறது. வாகன ஓட்டிகள், பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.எனவே, சங்கராபுரம் நகரில் தினசரி ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க சங்கராபுரத்திற்கு என தனியாக போக்குவரத்து போலீசாரை நியமிக்க எஸ்.பி., ஷ்ரவன்குமார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ