உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / விபத்தில் வாலிபர் பலி

விபத்தில் வாலிபர் பலி

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த வடக்கு நெமிலி கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் பரசுராமன், 26; நேற்று முன்தினம் இரவு 11:50 மணிக்கு பைக்கில் திருவெண்ணைநல்லுார் நோக்கி சென்றார். சுந்தரேசபுரம் முருகர் கோவில் அருகே சென்றபோது, எதிரில் வந்த டாட்டா ஏஸ் வேன் பைக் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த பரசுராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி ஐஸ்வர்யா, 19; கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் டாட்டா ஏஸ் வேன் ஓட்டிச் சென்ற மர்ம நபர் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை