மின்கம்பி உதவியாளர் தேர்வு 27, 28ம் தேதிகளில் நடக்கிறது
கள்ளக்குறிச்சி: மின்கம்பி உதவியாளர் தகுதி தேர்வு வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இதுகுறித்து கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மின்கம்பி உதவியாளர் தகுதி தேர்வு கடந்த 13 மற்றும் 14ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நிர்வாக காரணங்களால் வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தேர்வு நடைபெற உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ண ப்பித்திருந்த தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் தேர்வு தொடர்பான விவரங்கள் மற்றும் தேர்வு நுழைவுச் சீட்டினை பெற்றுக் கொள்ளலாம். வடசென்னை, அம்பத்துார், கோயம்புத்துார், திருப்பூர், கடலுார், திருச்சிராப்பள்ளி, நாகப்பட்டினம், திண்டுக்கல், மதுரை, சேலம், ஈரோடு, தஞ்சாவூர், திருநெல்வேலி, நாகர்கோவில், ஓசூர், உளுந்துார்பேட்டை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விருதுநகர், வேலுார், நாமக்கல் ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தேர்வு நடக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.