உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பெண்ணை தாக்கியவர் கைது

பெண்ணை தாக்கியவர் கைது

சின்னசேலம்: எலவடி கிராமத்தில் தகராறில் பெண்ணைத் தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.சின்னசேலம் அடுத்த எலவடி, காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் செல்லமுத்து மனைவி கலா, 35; இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வீராசாமி மகன் தாமோதிரன் என்பவருக்கும் நிலம் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது.நேற்று காலை 9:00 மணியளவில் கலா நிலத்தில் அவரது கனவருடன் இருந்தபோது, அங்கு வந்த தாமோதிரன் தகராறில் ஈடுபட்டு கலாவைத் தாக்கினார்.இது குறித்த புகாரின்பேரில், வழக்கு பதிந்த சின்னசேலம் போலீசார் தாமோதிரனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி