உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குட்கா வைத்திருந்த இரண்டு பேர் கைது

குட்கா வைத்திருந்த இரண்டு பேர் கைது

கள்ளக்குறிச்சி : வரஞ்சரம் அருகே வெவ்வேறு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த இரண்டு பெண்களை போலீசார் கைது செய்தனர்.வரஞ்சரம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கண்டாச்சிமங்களத்தை சேர்ந்த தைலம்மாள்,54; என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனைக்காக கடையில் வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து தைலம்மாளை கைது செய்து, அவரிடமிருந்த ரூ.1,710 மதிப்புள்ள ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.அதேபோல், புதுஉச்சிமேட்டில் குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த அருள்செல்வி,45; என்பவரை கைது செய்து, அவரிடமிருந்த ரூ.276 மதிப்புள்ள குட்கா பொருட்களை வரஞ்சரம் போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை