உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  சிறுமிக்கு பாலியல் சீண்டல் போக்சோவில் இருவர் மீது வழக்கு

 சிறுமிக்கு பாலியல் சீண்டல் போக்சோவில் இருவர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தொடர்பாக இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி வீட்டிற்கு கோவிந்தன் மகன் திருமலை, 27; என்பவர் அடிக்கடி வந்து செல்வது வழக்கம். கடந்த 10ம் தேதி வழக்கம் போல் வீட்டிற்கு சென்ற திருமலை, சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதற்கு சிறுமியின் தந்தையும் உடந்தையாக இருந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த சிறுமியின் தாய் நடந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் திருமலை மற்றும் சிறுமியின் தந்தை மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி