உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பூட்டிக்கிடக்கும் உடற்பயிற்சி கூடம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது

பூட்டிக்கிடக்கும் உடற்பயிற்சி கூடம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது

திருக்கோவிலுார் அஷ்டலட்சுமி நகரில் திறக்கப்பட்ட உடற் பயிற்சி கூடம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் உள்ளது.திருக்கோவிலுார் நகராட்சிக்குட்பட்ட அஷ்டலட்சுமி நகரில், அமைச்சர் பொன்முடியின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உடற்பயிற்சி கூடம் கட்டப்பட்டது. இதனை 2 மாதங்களுக்கு முன்பு அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார். இதனால் இளைஞர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், இன்று வரை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் பூட்டிக் கிடக்கிறது.உடற்பயிற்சி கூடத்தை பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி