மனைவி மாயம் கணவர் புகார்
கள்ளக்குறிச்சி; மனைவியைக் காணவில்லை என கணவர், போலீசில் புகார் அளித்துள்ளார்.கள்ளக்குறிச்சி, நேப்பால் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி பரணிதர்ஷினி, 24; இவரை கடந்த 4 ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து மணிகண்டன் அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.