மேலும் செய்திகள்
டாடா ஏஸ் வாகனம் மோதி பெண் பலி
28-May-2025
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் குடும்ப தகராறில் மனமுடைந்த பெண் தற்கொலை செய்து கொண்டார்.கள்ளக்குறிச்சி சித்தேரிக்கரையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மனைவி ராஜேஸ்வரி,38; இந்த தம்பதிக்கு இரு பிள்ளை உள்ளனர். கட்டட தொழிலாளியான கிருஷ்ணமூர்த்தி குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால், வேலைக்கு செல்லாமல் இருந்தார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. கடந்த, 20ம் தேதி ஏற்பட்ட சண்டையில், மனம் உடைந்த ராஜேஸ்வரி விஷம் குடித்து மயங்கினார். குடும்பத்தினர் அவரை மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
28-May-2025