மேலும் செய்திகள்
மர்மமான முறையில் கரூர் வாலிபர் இறப்பு
10-Jul-2025
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே கிணற்றில் மர்மமான முறையில் பெண் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். உளுந்துார்பேட்டை அடுத்த பில்லுார் போதையைச் சேர்ந்தவர் நடராஜ். விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி தனுசு, 38; இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். உளுந்துார்பேட்டை நகை கடை ஒன்றில் தனசு வேலை செய்து வந்தார். குடும்பத்தில் கடன் பிரச்னை இருந்தது. நேற்று முன்தினம் காலை வீட்டை விட்டு வெளியே சென்ற தனுசு, வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை 4:00 மணிக்கு, அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், உளுந்துார்பேட்டை தீயணைப்புத் துறையினர் மற்றும் எடைக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இறந்து கிடப்பது தனுசு என உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தனுஷின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து எடைக்கல் போலீசார் வழக்கு பதிந்து தனுசு இறப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
10-Jul-2025