உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பெண்ணைத் தாக்கிய வாலிபர் கைது

பெண்ணைத் தாக்கிய வாலிபர் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே பெண்ணைத் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் காந்தி நகரைச் சேர்ந்தவர் குமரேசன் மனைவி துளசி, 27; இவர், கடந்த 27ம் தேதி பிற்பகல் 2:00 மணியளவில் வீட்டில் தனியாக இருந்தார்.அப்போது, அதே ஊரைச் சேர்ந்த ராமசாமி மகன் அய்யனார், 30; அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து துளசியை கையை பிடித்து இழுத்து, தாக்கினார்.துளசி கொடுத்த புகாரின் பேரில் அய்யனார் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ