உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / திரவுபதியம்மன் கோவிலில் அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி

திரவுபதியம்மன் கோவிலில் அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி

காஞ்சிபுரம், கோவிந்தவாடி திரவுபதியம்மன் கோவிலில் வரும் 21ல் தீமிதி திருவிழா நடைபெற உள்ளது. கடந்த- 3ம் தேதி மஹாபாரத சொற்பொழிவு கொடி ஏற்றம், சிவாச்சாரியர்கள் முன்னிலையில் நடந்தது.கடந்த 10ம் தேதி வில் வளைப்பு நிகழ்ச்சி நடந்தது. அதே தினத்தில், பஞ்ச பாண்டவர்களுடன் திரவுபதியம்மனுக்கு திருமணம் நடந்தன. மறு நாள் சுபத்திரை திருமண நிகழ்ச்சி வெகுவிமரிசையாகநடந்தது.கடந்த 13ம் தேதி பஞ்ச பாண்டவர்கள், சூது ஆடியதில், துரியனிடம் நாடு, நகரத்தை இழந்தனர். நேற்று முன் தினம் இரவு வன வாசம் புறப்பட்ட பஞ்ச பாண்டவர்கள், கடுமையான விரதம் மேற்கொண்டனர்.இதில், சிவபெருமானை நோக்கி அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி நேற்று காலை துாரலிலும் வெகுவிமரிசையாக நடந்தது. சிறுவஞ்சிபட்டு சீதாராமன் அர்ச்சுனன் வேடமனிந்து, சிவனை நோக்கி தவம் புரிந்தார்.நிகழ்ச்சியில், விரதம் இருந்த பக்தர்கள் கொடி மரத்தை சுற்றி விழுந்து வணங்கி சென்றுனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை