உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் பிரம்மோத்சவம் துவக்கம்

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் பிரம்மோத்சவம் துவக்கம்

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில், பிரம்மோத்சவம் 11 நாட்கள் விமரிசையாக நடைபெறும். அதன்படி, நடப்பாண்டிற்கான பிரம்மோத்சவம் நேற்று அதிகாலை கொடியேற்றத்துடன் துவங்கியது.உத்சவத்தையொட்டி தினமும் காலை, மாலையில், காமாட்சியம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளிலும் உலா வருகிறார்.அதன்படி, முதல் நாள் உத்சவமான நேற்று காலை, கொடியேற்றத்தை தொடர்ந்து, காமாட்சியம்மன், நான்கு ராஜ வீதிகளிலும் உலா வந்தார். இரவு தங்க மான் வாகன உத்சவம் நடந்தது.இன்று காலை மகரத்திலும், இரவு சந்திர பிரபையிலும், நாளை காலை, தங்க சிம்ம வாகனத்திலும், இரவு யானை வாகனத்திலும் காமாட்சியம்மன் உலா வருகிறார். இதில், ஒன்பதாம் நாள், வெள்ளி ரதம் உத்சவம், வரும் 11ம் தேதி இரவு விமரிசையாக நடக்கிறது.பிரம்மோத்சவத்திற்கான ஏற்பாட்டை காஞ்சி புரம் காமாட்சியம்மன் கோவில் ஆதீன பரம்பரை கர்த்தாவின் ஸ்ரீகார்யம் சுந்தரேச அய்யர், கோவில் உதவி ஆணையர், செயல் அலுவலர் ராஜலட்சுமி, கோவில் மணியக்காரர் சூரியநாராயணன், கோவில் ஆதீன பரம்பரை ஸ்தலத்தார், ஸ்தானீகர்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி