நகர பஸ் சேவை நுகர்வோர் மனு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் அரசு நகர பேருந்து சேவை துவக்கக்கோரி, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு சங்க காஞ்சிபுரம் மாவட்ட செயலர் வழக்கறிஞர் பெர்ரி, காஞ்சிபுரம் கலெக்டருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார்.மனு விபரம்:காஞ்சிபுரம், 2021ல், மாநகராட்சியாக தரம் உயர்த்தியும், அரசு நகர பேருந்து சேவை இல்லாததால், பொதுமக்களும் மாணவ- - மாணவியர் ஷேர் ஆட்டோவில் பயணிக்கின்றனர்.எனவே, ஓரிக்கை - ஒலிமுஹமதுபேட்டை, செவிலிமேடு - புதிய ரயில் நிலையம், நத்தப்பேட்டை - பிள்ளையார்பாளையம், கங்கைகொண்டான் மண்டபம் - அய்யன்பேட்டை, டோல்கேட் - சிறுகாவேரிபாக்கம், முத்தியால்பேட்டை - பழைய ரயில் நிலையம், பெரியார் நகர் - புதிய ரயில் நிலையம் ஆகிய வழித்தடங்களில் நகர பேருந்து சேவை துவக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.