உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கழிவுநீர் கால்வாயில் அடைப்பு அருந்ததியர் நகரில் சுகாதார சீர்கேடு

கழிவுநீர் கால்வாயில் அடைப்பு அருந்ததியர் நகரில் சுகாதார சீர்கேடு

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாநகராட்சி 21வது வார்டு, திருக்காலிமேடு அருந்ததியர் நகர் 2வது தெருவில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இத்தெருவில் உள்ள வீடுகளில் இருந்து விடப்படும், வீட்டு உபயோக கழிவுநீர் வெளியேறும் வகையில், கான்கிரீட் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது.இக்கால்வாயை மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் முறையாக பராமரிக்காததால், கால்வாயில் மண் துகள், பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பை குவிந்துள்ளதால், கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.. இதனால், கழிவுநீர் வெளியேற வழியில்லாமல், ஒரே இடத்தில் தேங்குவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.மேலும், கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளது. இதனால், இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, அருந்ததியர் நகரில், கழிவுநீர் கால்வாயில் மண்டியுள்ள குப்பை குவியலை முழுமையாக அகற்றி, கழிவுநீர் தடையின்றி செல்ல வழி ஏற்படுத்த வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை