| ADDED : ஜூன் 30, 2024 11:37 PM
காஞ்சிபுரம்: வாலாஜாபாத் ஒன்றியம், வையாவூரில் இருந்து, ஒழையூர் கிராமத்திற்கு செல்லும் சாலையோரம் உள்ள விவசாய நிலங்களுக்கு மின் இணைப்பு வழங்க வயல்வெளி பகுதியில் மின்தட பாதைக்காக மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இதில், ஒரு மின்கம்பத்தின் அடிப்பகுதியில் உடைப்பு ஏற்பட்டு மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. பலத்த காற்றுடன் மழை பெய்தால், சேதமடைந்துள்ள மின்கம்பம் முற்றிலும் உடைந்து விழுந்து மின்விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, சேதமடைந்த பழைய மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பம் அமைக்க மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஒழையூர் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.