உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி வரதர் நடவாவி உற்சவம் அய்யங்கார்குளத்தில் விமரிசை

காஞ்சி வரதர் நடவாவி உற்சவம் அய்யங்கார்குளத்தில் விமரிசை

காஞ்சிபுரம்:ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியன்று காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் நடவாவி உற்சவம், அய்யங்கார்குளம் கிராமத்தில் விமரிசையாக நடக்கும். அதன்படி நடப்பு ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி நடவாவி உற்சவம் விமரிசையாக நடந்தது.உற்சவத்தையொட்டி உபயநாச்சியாருடன் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், கடந்த 22ம் தேதி, இரவு 9:00 மணிக்கு, மேனாப் பெட்டியில் எழுந்தருளி அய்யங்கார்குளம் கிராமத்திற்கு புறப்பட்டார்.இரவு 1:00 மணிக்கு செவிலிமேடில் கிராம வீதிகளில் உலா வந்தார். நேற்று முன்தினம், காலை 6:00 மணிக்கு, புஞ்சையரசந்தாங்கல், வாகை, துாசி கிராமத்தில் வீதியுலா வந்தார். பிற்பகல் 12:00 மணிக்கு துாசி வைகுண்ட பெருமாள் கோவிலில் சுவாமிக்கு மரியாதை நிகழ்ந்தது.அங்கிருந்து பிற்பகல் 1:30 மணிக்கு புறப்பாடாகி அப்துல்லாபுரம் மற்றும் அய்யங்கார்குளத்தில் வீதியுலா சென்று, இரவு 8:00 மணிக்கு அய்யங்கார்குளம் கிராமத்தில் சஞ்சீவிராயர் கோவிலில் எழுந்தருளினார், அங்கு பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது.அங்கிருந்து 9:00 மணியளவில் புறப்பாடாகி தாதசமுத்திரம் ஏரிக்கரை வழியாக சென்று, 9:30 மணிக்கு நடவாவி கிணற்றில் வரதராஜ பெருமாள் இறங்கினார்.அங்கு பக்தி உலாத்தல், பூஜைகள் நடைபெற்றபின், கிணற்றில் இருந்து வெளியே எழுந்தருளிய பெருமாள், புஞ்சையரசந்தாங்கல் வழியாக செவிலிமேடு பாலாற்று பந்தலில் இரவு 10:00 மணிக்கு எழுந்தருளினார்.அங்கு பெருமாளுக்கு திருமஞ்சனம், பிரம்மாராதமன், நிவேதனம், பூஜைகளுக்குப்பின், பாலாற்றங்கரையில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி