உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஆம்னி பேருந்து நிலையம் அடுத்த மாதம் திறக்க முடிவு

ஆம்னி பேருந்து நிலையம் அடுத்த மாதம் திறக்க முடிவு

சென்னை: சென்னை போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் கட்டப்பட்டுள்ளது. இங்கு, ஆம்னி பேருந்துகளுக்கு பணிமனை வசதி இல்லை. இதற்காக, தாம்பரம் அடுத்த முடிச்சூரில், வெளிவட்ட அணுகு சாலையை ஒட்டியுள்ள சி.எம்.டி.ஏ., இடத்தில், ஆம்னி பேருந்து நிலையம் கட்டும் பணி 40 கோடி ரூபாயில் 5 ஏக்கரில் நடந்து வருகிறது. இந்த பணிகளை, ஹிந்து சமய அறநிலையத்துறை மற்றும் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் அமைச்சர் சேகர்பாபு, நேற்று நேரில் ஆய்வு செய்தார்.அப்போது அவர் கூறுகையில், ''முடிச்சூரில் ஒரே நேரத்தில் 117 பேருந்துகள் நிறுத்தும் அளவிற்கு, இந்த பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டு உள்ளது. கழிப்பறை, குளியல் அறை ஓட்டுனர்கள், கிளீனர்கள் என 100 பேர் தங்கும் அளவிற்கு இரு கட்டடங்கள் கட்டப்படுகின்றன.''மழைக்காலத்தில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அடுத்த மாதம் இறுதிக்குள், ஆம்னி இந்த பேருந்து நிலையம் திறக்கும் வகையில் பணிகள் நடந்து வருகின்றன,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி