உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / செடி, கொடிகள் படர்ந்துள்ள ஒரகடம் மேம்பால மின்கம்பம்

செடி, கொடிகள் படர்ந்துள்ள ஒரகடம் மேம்பால மின்கம்பம்

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலை, வண்டலுார் -- வாலாஜபாத் சாலைகள் இணையும் நான்குசாலை சந்திப்பில் ஒரகடம் மேம்பாலம் உள்ளது. மேம்பாலம் வழியாக, காஞ்சிபுரம், வேலுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த நிலையில், மேம்பாலத்தில் உள்ள மின்கம்பம் பராமரிப்பின்றி உள்ளது. மின்கம்பத்தில் செடி, கொடிகள் படர்ந்துள்ளன. இதனால், மேம்பாலத்தின் உறுதித்தன்மை பாதிப்பதுடன், மின்விபத்து ஏற்படும் அச்சத்தில் வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர்.எனவே, மேம்பால மின்கம்பங்களைச் சூழ்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றி, முறையாகப் பராமரிக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்