வில்லிவலத்தில் பார்வேட்டை உற்சவம்
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் அடுத்த வில்லிவலம் கிராமத்தில், ஹிந்து சமய அறநிலைய துறை ஆய்வாளர் கட்டுப்பாட்டில், முச்சந்தியம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் மாசி மாத பர்வுணமி தினத்தில் பார்வேட்டை உத்சவம் நடைபெறும். நடப்பாண்டிற்குரிய மாசி மாத பார்வேட்டை உத்சவம் நேற்று நடந்தது. பகல், 1:00 மணிக்கு முச்சந்தியம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், சந்தன காப்பு அலங்காரம் நடந்தது. இரவு, 8:00 மணிக்கு மலர் அலங்காரத்தில், முச்சந்தியம்மன் வீதி உலா மற்றும் பார்வேட்டை உத்சவத்தில் முயல்விடும் நிகழ்ச்சி நடந்தது.