உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ரயில்கேட் மூடல் ஆட்டுப்பாக்கம் வழியில் செல்ல அறிவுறுத்தல்

ரயில்கேட் மூடல் ஆட்டுப்பாக்கம் வழியில் செல்ல அறிவுறுத்தல்

நெமிலி, ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியம், சேந்தமங்கலம் வழியாக, அரக்கோணம் - செங்கல்பட்டு ரயில் வழித்தடம் செல்கிறது.செங்கல்பட்டு - அரக்கோணம் இடையே, மின்சார ரயில்கள் மற்றும் மும்பை - நாகர்கோவில் இடையே வாரந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.ரயில் கேட் பராமரிப்பு காரணமாக, இன்று, நாளை, நாளை மறுநாள் ஆகிய மூன்று நாட்களும் இரவு 9:00 மணி முதல், காலை 6:00 மணி வரையில், கேட் மூடப்பட உள்ளன.அரக்கோணம், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து, நெமிலி பகுதிக்கு செல்வோர் ஆட்டுப்பாக்கம் ரயில்வே கேட் வழியாக செல்லலாம் என, ரயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை