உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / எச்சூரில் மண் அரிப்பால் சாலையோர பள்ளம்

எச்சூரில் மண் அரிப்பால் சாலையோர பள்ளம்

ஸ்ரீபெரும்புதுார்:பண்ருட்டி -- எச்சூர் சாலை வழியே நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. ஒரகடம், வல்லம் சிப்காட் தொழிற்சாலைகளில் பணிபுரியம் ஊழியர்கள்,இருசக்கர வாகனங்களில் அதிகம் சென்று வருகின்றனர்.வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையில் ஏற்பட்ட மண் அரிப்பினால், சாலையோரங்களில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.குறிப்பாக, இரவு நேரங்களில் எதிரே வரும் கனரக வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கும் போது, சாலையோர பள்ளத்தில் விழுந்து காயமடைந்து வருகின்றனர்.எனவே, மண் அரிப்பினால் ஏற்பட்ட பள்ளத்தில், மண்ணை கொட்டி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை