உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நீர்வரத்து கால்வாயில் கழிவுநீர் குப்பை தேக்கம்

நீர்வரத்து கால்வாயில் கழிவுநீர் குப்பை தேக்கம்

வாலாஜாபாத்,:வாலாஜாபாத் பாலாற்றில் இருந்து, முனிசிப் நாராயணசாமி தெரு வழியாக, வல்லப்பாக்கம் ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய் உள்ளது. இந்த கால்வாயை ஒட்டியுள்ள குடியிருப்பு வாசிகள், கடந்த ஆண்டுகளில் கால்வாய் பகுதிகளை துார்த்தும், கட்டடங்கள் கட்டியும் ஆக்கிரமித்துள்ளனர்.இதனால், இந்த நீர்வரத்து கால்வாய், நாளடைவில் வாலாஜாபாத் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாயாக மாறியது. தற்போது, கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் காரணமாக, கழிவுநீர் ஆங்காங்கே தேங்கியுள்ளது.அதன் ஒரு பகுதியாக, வாலாஜாபாத் பஜார் வீதி அடுத்த முனிசிப் நாராயணசாமி தெருவில், தரைப்பாலத்திற்குள் அடைப்புகள் ஏற்பட்டு கழிவுநீரோடு, குப்பை கழிவுகள் தேக்கமாகி உள்ளது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் மற்றும் கொசு உற்பத்தி அதிகரிப்பு உள்ளிட்ட சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளது.எனவே, வாலாஜாபாத் முனிசிப் நாராயணசாமி தெருவில் கழிவுநீர் கால்வாய் அடைப்புகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை