உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மின் கம்பியில் உரசும் புளிய மரக்கிளை ஆரியபெரும்பாக்கத்தில் விபத்து அபாயம்

மின் கம்பியில் உரசும் புளிய மரக்கிளை ஆரியபெரும்பாக்கத்தில் விபத்து அபாயம்

ஆரியபெரும்பாக்கம்,காஞ்சிபுரம் ஒன்றியம், கீழம்பியில் இருந்து, ஆரியபெரும்பாக்கம் கிராமத்திற்கு செல்லும் சாலையோரம் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க, மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இதில், 10க்கும் மேற்பட்ட இடங்களில் சாலையோரம் உள்ள புளிய மரத்தின் கிளைகள் மின் கம்பிகளை உரசும் வகையில் வளர்ந்துள்ளன. காற்றடிக்கும்போது மரக்கிளைகள் மின் கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசும்போது, அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிப்பு ஏற்படுவதாகஅப்பகுதியினர் புகார்தெரிவிக்கின்றனர்.மேலும், மழைக்காலங்களில் தீப்பொறி ஏற்பட்டு மின்கம்பி அறுந்து விழுந்து மின்விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, கீழம்பியில் இருந்து ஆரியபெரும்பாக்கம் செல்லும் சாலையோரம் மின் கம்பிகளை உரசும் வகையில் வளர்ந்துள்ள புளிய மரத்தின் கிளைகளை அகற்ற மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி