மேலும் செய்திகள்
மின் கம்பம் சேதம்: மக்கள் பீதி
14-May-2025
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்டது சங்கராபுரம் கிராமம். இப்பகுதியினர், காஞ்சிபுரம், வாலாஜாபாத் மற்றும் செங்கல்பட்டு செல்ல அங்குள்ள பிரதான சாலை பேருந்து நிறுத்தத்திற்கு வந்து, அங்கிருந்து பேருந்து பிடித்து செல்கின்றனர்.இப்பேருந்து நிறுத்தத்தில் உள்ள மின் கம்பத்தின் வாயிலாக, சங்கராபுரம் மற்றும் பழையசீவரம் பகுதிக்கு செல்லதக்க வகையில் மின் ஒயர்கள் பொருத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்த மின்கம்பம் பழுதடைந்து அதன் மேல் பகுதியில், கான்கிரீட் பெயர்ந்து, இரும்பு கம்பிகளை தாங்கி நிற்கிறது.இதனால், காற்று மழை நேரங்களில் மின் கம்பத்தின் முனைப்பகுதி உடைப்பு ஏற்பட்டு விபத்து ஏற்படக்கூடும் என, அப்பகுதியினர் அச்சப்படுகின்றனர்.எனவே, சங்கராபுரத்தில் விபத்து அபாயத்தை தடுக்கும் பொருட்டு, முன்னெச்சரிக்கையாக உடைந்து விழும் நிலையிலான மின்கம்பத்தை மாற்றி, புதிய மின்கம்பம் அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.
14-May-2025