உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மழைநீர் வடிகால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்

மழைநீர் வடிகால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்

கீழம்பி:காஞ்சிபுரம் - வேலுார் சாலையில் உள்ள கீழம்பியில் இருந்து, சிறுகாவேரிபாக்கம் செல்லும் சாலையோரம், அப்பகுதியில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில், வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.இக்கால்வாயை முறையாக பராமரிக்காததால், கால்வாயில், செடி, கொடிகள் வளர்ந்து துார்ந்த நிலையில் உள்ளது.இதனால், மழைகாலத்தில், கால்வாய் வாயிலாக வெளியேற வேண்டிய மழைநீர் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை சூழும் நிலை உள்ளது.எனவே, கால்வாயில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றி மண் கால்வாயை, கான்கிரீட் கால்வாயாக அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை