உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உத்திரமேரூர் பேரூராட்சியில் 100 சதவீதம் வரி வசூலிப்பு

உத்திரமேரூர் பேரூராட்சியில் 100 சதவீதம் வரி வசூலிப்பு

உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சியில் உள்ள, 18 வார்டுகளில் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள், உணவகங்கள் ஆகியவை இயங்கி வருகின்றன.இந்நிலையில், உத்திரமேரூர் பேரூராட்சியில், 2024 -- 25ம் ஆண்டிற்கான சொத்து வரி, திடக்கழிவு சேவை கட்டணம், தண்ணீர் கட்டணம், தொழில் வரி மற்றும் வரியில்லா இனங்கள் ஆகிய அனைத்தும் 100 சதவீதம் நிலுவையின்றி வசூல் செய்யப்பட்டுள்ளது.இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் பழனிகுமார் கூறியதாவது:உத்திரமேரூரில், 2024- - 25ம் ஆண்டிற்கான வரி வசூலை, வரித்தண்டலர், இளநிலை உதவியாளர்கள், அலுவலக பணியாளர்கள் ஆகியோர் இணைந்து 100 சதவீதம் எட்ட ஒத்துழைப்பு கொடுத்தனர்.மேலும், வரும் காலங்களில் தமிழக அரசின் அனைத்து திட்டங்களும், உத்திரமேரூர் பேரூராட்சியில் முழுமையாக செயல்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !