1.68 லட்சம் கறவை மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், கறவை மாடுகளுக்கு, 8வது சுற்று கோமாரி தடுப்பூசி போடும் பணியை, திருமுக்கூடல் கிராமத்தில் இணை இயக்குநர் நேற்று துவக்கி வைத்தார். மாவட்டத்தில் உள்ள, 1.68 லட்சம் கறவை மாடு களுக்கு, கோமாரி தடுப்பூசி போடும் பணியை, காஞ்சிபுரம் மண்டல இணை இயக்குநர் மைதீன் பாத்திமா நேற்று திரு முக்கூடலில் துவக்கி வைத்தார். வரும் ஜனவரி 28ம் தேதிக்குள் அனைத்து மாடுகளுக்கும் கோமாரி தடுப்பூசி போடும் பணி நிறைவு செய்யப்படும் என, கால்நடை துறையினர் தெரிவித்தனர்.