உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சங்கரா பன்நோக்கு மருத்துவமனை மருத்துவ முகாமில் 332 பேர் பங்கேற்பு

சங்கரா பன்நோக்கு மருத்துவமனை மருத்துவ முகாமில் 332 பேர் பங்கேற்பு

ஏனாத்துார்:காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்துாரில் உள்ள சங்கரா பன்நோக்கு மருத்துவமனையில் நேற்று நடந்த இலவச மருத்துவ முகாமில், 332 பேர் பங்கேற்றனர்.காஞ்சிபுரம் சங்கரா பன்நோக்கு மருத்துவமனை, என்.ஐ.சி.பி., மெட்ராஸ் மெடிக்கல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ஹூன்டாய் பவுன்டேஷன் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.இம்மருத்துவ முகாமில், 332 பேர் பங்கேற்றனர். இதில், பெண்கள் மற்றும் ஆண்களுக்கான புற்றுநோய் கண்டறிதல், கர்ப்பிணியருக்கான சிறப்பு ஆலோசனை வழங்கப்பட்டது.மேலும், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, ஹீமோகுளோபின் ரத்த அளவு, கண், மார்பகம், கர்ப்பப்பை, சிறுநீரகப் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு, மாதவிடாய் பிரச்னைக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.கர்ப்பிணியருக்கு, கர்ப்பத்தில் உள்ள குழந்தைக்கான இதய துடிப்பு, இ.சி.ஜி., எக்கோ உள்ளிட்ட பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது. சுகபிரசவத்திற்கான எளிய முறையிலான உடற்பயிற்சி பயிற்றுவிக்கப்பட்டது.ஆண்களுக்கு, வாய் மற்ற பாகங்களில் உள்ள கட்டிகள், விதைப்பை கட்டி, ரத்த அழுத்தம், சர்க்கரை, கண் பரிசோதனை செய்து, பல்வேறு சந்தேகங்களுக்கு சங்கரா மருத்துவமனையின் மருத்துவர்கள் ரிச்சர்ட், சிந்துஜா, ஷன்மா உள்ளிட்ட மருத்துவ குழுவினர் ஆலோசனை வழங்கினர்.முகாமில், மருத்துவமனை மேனேஜிங் டிரஸ்டி விஸ்வநாதன், சி.இ.ஓ., விஜயலட்சுமி, டிரஸ்டி ஸ்ரீராம், மேலாளர் நந்தகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை