உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு 842 நபர்கள் ஆப்சென்ட் 

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு 842 நபர்கள் ஆப்சென்ட் 

காஞ்சிபுரம்:டி.என்.பி.எஸ்.சி., ஒருங்கிணைந்த தொழில்நுட்பத் தேர்வில், 842 நபர்கள் தேர்வு எழுத வரவில்லை. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், ஒருங்கிணைந்த தொழில்நுட்பத் தேர்வு நேற்று நடந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் உள்ளிட்ட 10 தேர்வு மையங்களில், 1,760 நபர்கள் தேர்வு எழுத அனுமதி அளித்தனர். இதில், 918 நபர்கள் மட்டுமே தேர்வு எழுதினர். மீதம், 842 நபர்கள் தேர்வு எழுதவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ