உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பிரதான குழாயில் உடைப்பு மாமல்லன் நகரில் குடிநீர் வீண்

பிரதான குழாயில் உடைப்பு மாமல்லன் நகரில் குடிநீர் வீண்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளுக்கும் பாலாறு, வேகவதி, திருப்பாற்கடல்உள்ளிட்ட ஆற்றங்கரையில் ஆழ்துளை குழாய் அமைத்து, நிலத்தடியில் புதைக்கப்பட்ட குழாய் வாயிலாக குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், மாமல்லன் நகர் பிரதான சாலையில், நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு, ஒரு வாரத்திற்கும் மேலாக குடிநீர் வீணாக சாலையில் வெளியேறி வருகிறது.இதனால், குடிநீர் வீணாவதோடு, அப்பகுதியில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ