உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கான்கிரீட் பெயர்ந்த ரேஷன் கடை கூரை உடனடியாக அகற்ற பயனாளிகள் கோரிக்கை

கான்கிரீட் பெயர்ந்த ரேஷன் கடை கூரை உடனடியாக அகற்ற பயனாளிகள் கோரிக்கை

உத்திரமேரூர்:சேத்துப்பட்டு ரேஷன் கடை கூரையில் கான்கிரீட் பெயர்ந்து உள்ளதால், அதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உத்திரமேரூர் ஒன்றியம், பெருநகர் ஊராட்சியில் உள்ள சேத்துப்பட்டு துணை கிராமத்தில் 1,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு, பெருநகர் செல்லும் சாலையோரத்தில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இக்கடையில், 252 குடும்ப அட்டைதாரர்கள் மாதந்தோறும் உணவு பொருட்களை வாங்கி செல்கின்றனர். 25 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட, இந்த ரேஷன் கடை கட்டடம் முறையாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது.இதனால், கட்டடத்தின் கூரை, பக்கவாட்டு சுவர்கள் சேதமடைந்து கான்கிரீட் பெயர்ந்து உள்ளது. அதிலிருந்த இரும்புக் கம்பிகள் வெளியே தெரிகின்றன.மழை நேரங்களில் மழைநீர் கூரையில் வழிந்து உணவு பொருட்கள் நனைந்து வீணாகின்றன. மேலும், ரேஷன் கடை கட்டடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், பொருட்கள் வாங்க வருபவர்கள் அச்சத்தோடு வந்து செல்கின்றனர்.எனவே, சேதமடைந்துள்ள சேத்துப்பட்டு ரேஷன் கடை கட்டடத்தை அகற்றிவிட்டு, புதிய கட்டடம் கட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி