உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பருவமழை முன்னெச்சரிக்கையாக கால்வாய் துார்வாரும் பணி துவக்கம்

பருவமழை முன்னெச்சரிக்கையாக கால்வாய் துார்வாரும் பணி துவக்கம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில், சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில், வரும் 25ல், தென்மேற்கு பருவ மழை துவங்க உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இதையடுத்து, பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பில் உள்ள மழைநீர் வடிகால்வாய் துார்வாரும் பணி நேறறு துவங்கியது.சின்ன காஞ்சிபுரம் டி.கே.நம்பி தெரு. சி.எஸ்.செட்டி தெரு, காமராஜர் வீதி, நெல்லுக்காரத் தெரு, காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையோரம் உள்ள மழைநீர் வடிகால்வாய் துார்வாரும் பணி துவக்கப்பட்டுள்ளது என, நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி