உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சேதமடைந்த நிழற்குடை கூரை சிறுமையிலுாரில் பயணியர் அவதி

சேதமடைந்த நிழற்குடை கூரை சிறுமையிலுாரில் பயணியர் அவதி

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், சிறுமையிலூர் கிராமத்தில், நெல்வாய் -- திருமுக்கூடல் செல்லும் சாலையில், பயணியர் நிழற்குடை உள்ளது. இந்த பயணியர் நிழற்குடை, 25 ஆண்டுக்கு முன் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. தற்போது, இந்த பயணியர் நிழற்குடை பராமரிப்பு இல்லாமல், கூரை சேதமடைந்து, கான்கிரீட் பெயர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன.இதனால், பயணியர், நிழற்குடையின் உள்ளே சென்று அமர்வதை தவிர்த்து, வெளியே காத்திருந்து பேருந்து பிடித்து செல்கின்றனர்.எனவே, சேதமடைந்த நிழற்குடையை அகற்றி, புதிய நிழற்குடை அமைக்க, ஊரக வளர்ச்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !