உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் விபத்து அபாயம்

தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் விபத்து அபாயம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், களக்காட்டூரில் இருந்து, கே.எஸ்.பி., நகருக்கு செல்லும் சாலையோரம், அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக மின்தடை பாதைக்கான மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இதில் இரு மின்கம்பங்களுக்கு இடையே செல்லும் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றன. இதனால், இச்சாலையில், கனரக வாகனங்கள் செல்லும்போதோ, வைக்கோல் ஏற்றி வரும் லாரி, சாலையோரம் ஒதுங்கும்போது, தாழ்வாக செல்லும் மின்கம்பியில் உரசி மின் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, மின் விபத்தை தவிர்க்கும் வகையில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை இழுத்து கட்டி, சீரமைக்க மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி