உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இருளில் மூழ்கிய குளக்கரை சாலை திருக்காலிமேடில் விபத்து அபாயம்

இருளில் மூழ்கிய குளக்கரை சாலை திருக்காலிமேடில் விபத்து அபாயம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் திருக்காலிமேடு சின்ன வேப்பங்குளக்கரை சாலையில், பழுதடைந்த தெரு விளக்குகளை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாநகராட்சி 22வது வார்டு திருக்காலிமேடு சின்னவேப்பங்குளக்கரை சாலையில் 25க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இச்சாலை வழியாக சின்ன காஞ்சிபுரம் பகுதிக்கு செல்வோர் சென்று வருகின்றனர். இந்நிலையில், மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள தெரு மின்விளக்குகள் அடிக்கடி பழுதடைந்து ஒளிராமல் உள்ளதால், இச்சாலை இருள் சூழ்ந்து காணப் படுகிறது. மேலும், சின்னவேப்பங்கு ளத்திற்கு தடுப்புச் சுவர் இல்லாததால், இச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், நிலை தடுமாறி குளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே, சின்னவேப்பங்குளக்கரை சாலையில், பழுதடைந்துள்ள தெரு விளக்குகளை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை